Table of Contents

சிறு தொழில் வளர்ச்சிக்கு நிதி தேவைப்படுதா? உங்களுக்கு உதவ சிட் ஃபண்ட்ஸ் இருக்கு!

SME growth through chit funds

தொழில் வளர்ச்சிக்கு முதலீடு மிகவும் முக்கியம். நீங்கள் ஒரு சின்ன கடை உரிமையாளராக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் பிஸினஸ் பண்றவரா இருந்தாலும் சரி, அல்லது அனுபவம் வாய்ந்த வர்த்தகராக இருந்தாலும் சரி, ஒரு கட்டத்துக்கு வந்ததும் பணம் தான் ஒரு பெரிய சவாலாக இருக்கும். கடைக்கு சரக்கு கொள்முதல் செய்ய, விளம்பரம் செய்ய, சம்பளம் கொடுக்க, எதிர்பாராத செலவுகள் என எதற்கெடுத்தாலும் பணம் தான் முக்கிய தேவையா இருக்கு. 

“கையில கொஞ்சம் காசு இருந்தா, நம்ம தொழில எங்கேயோ கொண்டு போயிடலாம்.” – அப்படின்னு நினைக்காதவங்களே இல்லை. ஆனால் சரியான நேரத்துல நிதி உதவி கிடைப்பது எப்போதும் ஒரு சிரமமான விஷயமாகத்தான் இருக்கும்.

பணம் தேவைன்னா நாம என்ன பண்ணுவோம்? கடன்தான் வாங்குவோம்! நண்பர்கள் மற்றும் சொந்தக்காரங்ககிட்ட எவ்வளவுதான் வாங்க முடியும்? மேலும் சொன்ன நேரத்துல திருப்பி தர முடியாம போனா அது உறவில் சங்கடத்தை ஏற்படுத்தும். பேங்க்ல லோன் வாங்கப் போனா, அதுவும் சின்ன பிசினஸுக்குன்னா, ரொம்பவே கஷ்டம். அவங்க நிறைய கண்டிஷன்ஸ் போடுவாங்க. வட்டி வேற விண்ணை முட்டும். தனியார்ல கடன் வாங்கலாம்னு நெனச்சா, சொத்து பத்திரமெல்லாம் கேப்பாங்க. அவங்க போடுற வட்டிய பாத்தா தலை சுத்தும். சரி நம்ம பிக்ஸட் டெபாசிட்ல போட்ட பணத்தை எடுக்கலாம்னா, மெச்சூரிட்டிக்கு முன்னாடியே எடுத்தோம்னா, வர வேண்டிய வட்டியை இழந்துடுவீங்க.

அபராதம் வேற கட்டணும். நம்ம முதலீட்டுல லாபம் கம்மியாகிடும். அதுவும் இல்லாம, அந்த டைம் வரைக்கும் கிடைச்ச வட்டிக்கு டாக்ஸ் வேற கட்டணும், ஆனா நம்மளுக்கு எதிர்பார்த்த காசு கிடைக்காது.

கடன் வாங்காம இருந்தா வளர்ச்சி இல்லை, அதிக வட்டி குடுக்க முடியாது, ஆனா பணம் வேணும் – இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கா? இருக்கு! அதுதான் சிட் ஃபண்ட்ஸ்! சீட்டு சேர்ரதுனு சொல்லுவாங்கள, அதேதாங்க!

சிட் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?

சிட் ஃபண்ட் என்பது ஒரு நிதி சேமிப்பு முறையாகும். இதில் பலரும் ஒரு குழுவாக சேர்ந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு உறுப்பினர் ஏல முறையில் தொகையை பெற்றுக்கொள்வார். இதன் மூலம், பணம் சேமிக்கவும், நிதி தேவையை நிறைவு செய்யவும் சீட்டு போட்ட எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிட் ஃபண்ட் எப்படி செயல்படுகிறது?

  • ஒரு குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள்.
  • ஒவ்வொரு மாதமும் ஏல முறையில் (Auction) ஒரு உறுப்பினர் தொகையை பெற்றுக்கொள்வார்.
  • அனைவரும் ஒரு முறை தொகையை பெற்ற பிறகு சிட் ஃபண்ட் முடிவடையும்.

சிட் ஃபண்ட்ஸ்: சரியான தேர்வா?

சிறு தொழில் செய்வோருக்கு இது மிகவும் லாபகரமான சேமிப்பு திட்டம்தான். ஆனா, “நம்பலாமா? ஏதாவது ரிஸ்க் இருக்கா?”-ன்னு உங்களுக்குத் தோணலாம். கவலைப்படாதீங்க! சரியான, அங்கீகரிக்கப்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்களாப் பாத்துத் தேர்ந்தெடுத்தா எந்தப் பிரச்சினையும் வராது. சிட் ஃபண்ட்ஸ் சரியான முறையில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட திட்டம். கடனில் சிக்கிக்கொள்ளாமல் உங்கள் நிதி இலக்குகளை அடைய இது ஒரு வசதியான வழி.

சிட் ஃபண்ட்ஸ்: என்ன நன்மைகள்?

சிட் ஃபண்டுகள் பயன்படுத்த எளிதானவை. பேங்க்ல லோன் வாங்கறது ரொம்ப கஷ்டம், ஆனா சிட் ஃபண்ட்ல அவ்ளோ ஈஸி. பேங்க்ல லோன் வாங்கணும்னா, கடைசி வரைக்கும் அலையணும். ஆனா, சிட் ஃபண்ட்ஸ்ல அந்த மாதிரி பிரச்சனை இல்ல. உங்களுக்கு எப்போ பணம் தேவையோ, அப்போ விரைவான நிதி உதவியை பெற முடியும். ஒவ்வொரு மாசமும் நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி சேமிக்கலாம். எப்போ பணம் தேவையோ அப்போ பரிசுத் தொகையையும் கோரலாம். வட்டி இல்லாம பணம் கிடைக்கும். கிரெடிட் ஸ்கோர் பத்தி கவலைப்பட தேவையில்ல. அவசர தேவைக்கு, திடீர் செலவுக்கு, இல்ல உடனே செய்ய வேண்டிய விஷயத்துக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். மிகவும் நம்பகமானது.

சிட் ஃபண்ட்ஸ் எப்படி சிறு தொழில் செய்வோருக்கு உதவும்?

சிட் ஃபண்டுகள் சிறு வணிக உரிமையாளர்களுக்கு பல குறிப்பிடத்தக்க வழிகளில் ஒரு ஊன்றுகோலாக விளங்குகின்றன. சிலவற்றைப் பார்ப்போம்.

பணப்புழக்கம் நல்லா இருக்கும்:

சிட் ஃபண்ட்ல பணம் போட்டா, தேவையான நேரத்துல நமக்கு பணம் கிடைக்கும். அதனால தொழில்ல பணத்தட்டுப்பாடு இருக்காது.

பேங்க் லோனை விட ஈஸி:

பேங்க்ல லோன் வாங்கப் போனா ஏகப்பட்ட கண்டிஷன் போடுவாங்க. ஆனா சிட் ஃபண்ட்ல ஈஸியா பணம் கிடைக்கும்.

வட்டி தொல்லை இல்லை:

பேங்க் லோனுக்கு வட்டி கட்டணும். ஆனா சிட் ஃபண்ட்ல அந்த தொல்லை இல்ல.

நம்பகமான சேமிப்பு:

இது ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டம்.

லாபமிக்க முதலீடு

வங்கியில் கடன் வாங்கினால் நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சிட் ஃபண்ட் மூலம் நீங்க குறைந்த வட்டியில் பணம் பெற முடியும்.

உங்கள் பிஸினஸ்க்கு இது பயனுள்ளதா?

நிச்சயமாக! ஒரு சின்ன பிசினஸ் நடத்துறது பார்க்குறதுக்கு சூப்பரா இருந்தாலும், சில சமயம் கஷ்டமா இருக்கும். ஏன்னா, வருமானம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. கொஞ்சம் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். லாபம், நஷ்டம் மாறி மாறி வரும். அதனால, பணம் சேமிக்கிறது கொஞ்சம் கஷ்டம். அந்த மாதிரி நேரத்துல சிட் ஃபண்ட்ஸ் நமக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

சிட் ஃபண்ட்ஸ்ல மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேமிக்க முடியும். நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி எவ்ளோ வேணும்னாலும் சேமிக்கலாம். இது சின்ன பிஸினஸ் பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.  இப்படி தொடர்ந்து சேமிக்கிறதுனால, நம்ம பணத்தை எப்படி கையாளனும்னு கத்துக்கலாம். வரவு செலவு கணக்கு பாக்கலாம், புத்திசாலித்தனமா முடிவெடுக்கலாம்.

சிட் ஃபண்ட்ஸ்ல சேர்றதுனால, நம்மகிட்ட ஒரு சேமிப்பு பழக்கம் வரும். மாசம் மாசம் குறிப்பிட்ட தொகையை ஒழுங்கா சேமிக்கிறதுனால, பிசினஸ்ல திடீர்னு ஏதாவது பிரச்சனை வந்தா சமாளிக்க முடியும். திடீர்னு பணம் தேவைப்பட்டா, சிட் ஃபண்ட்ஸ்ல இருந்து ஈஸியா எடுத்துக்கலாம். பேங்க் லோன் மாதிரி அதிக நாள் காத்திருக்க தேவையில்ல.

உதாரணத்துக்கு நீங்க ஒரு ஸ்வீட் கடை வச்சிருக்கீங்கன்னு வச்சுக்கோங்க. பண்டிகை சீசன்ல, சிட் ஃபண்ட்ஸ்லருந்து எடுக்கற பணத்தை வச்சு நிறைய சர்க்கரை, நெய், முந்திரி எல்லாம் வாங்கி நிறைய ஸ்வீட்ஸ் தயாரித்து லாபம் பாக்கலாம். அதே நேரம், பிசினஸ் கொஞ்சம் டல்லா போனா, அதே பணத்தை வச்சு கடை வாடகை, சம்பளம் மாதிரியான செலவுகளை சமாளிக்கலாம். 

 அதுமட்டுமில்லாம, சிட் ஃபண்ட்ஸ்ல மாசம் மாசம் குறிப்பிட்ட தொகையை கட்டணும். எவ்ளோ கட்டணும்னு நமக்கு நல்லா தெரியும். அதனால நம்ம பட்ஜெட்ட அதுக்கு ஏத்த மாதிரி போட்டுக்கலாம். பேங்க் லோன் மாதிரி அதிக வட்டி கட்டணும்னு பயப்பட தேவையில்ல. டென்ஷன் இல்லாம பிசினஸ நடத்தலாம்.

வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஷேர் மார்க்கெட் பங்குகளை விட சிட் ஃபண்டுகள் ஏன் சிறந்தவை?

சிறு வணிக உரிமையாளர்களுக்கு, வங்கி கடன்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஷேர் மார்க்கெட் பங்குகளுடன் ஒப்பிடும்போது சிட் ஃபண்டுகள் சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்கள்:

சிட் ஃபண்டுகளில் சேர நீங்கள் நிதி நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்வாகக் கட்டணங்கள் அல்லது தரகு கமிஷன்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஷேர் மார்க்கெட் பங்குகள் பெரும்பாலும் பல்வேறு கட்டணங்களுடன் வருகின்றன. மேலும் இவை அவசர பணத்தேவைகளுக்கு ஏற்றதல்ல. சந்தை நிலவரம் சரியாக இல்லாவிட்டால் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஷேர் மார்க்கெட் பங்குகளினால் நஷ்டம் ஏற்படலாம். ஆனால் உங்களுக்குத் தேவைப்படும்போது பணத்தைப் பெறுவதற்கு சிட்கள் உங்களுக்கு மிகவும் நம்பகமான வழியை வழங்குகின்றன.

சிட் ஃபண்டுகள் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஷேர் பங்குகளை விட ஏன் சிறந்த தேர்வாக இருக்கலாம் என பார்க்கலாம்: 

கட்டாய சேமிப்பு:

மாதாந்திர தவணை செலுத்துவதால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து பணம் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் சிட் ஃபண்டுகள் ஒரு நல்ல  சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உடனடி நிதி:

சிட் ஃபண்டுகளில் தேவைப்படும்போது ஏல முறையில் பணம் எடுக்கலாம். அவசர தேவைகளுக்கு அல்லது குறுகிய கால நிதி தேவைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளைப் பொறுத்தவரை, பணத்தை எடுக்க சிறிது காலம் ஆகலாம். மேலும் சந்தை மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பணத்தை எடுக்க வேண்டியிருக்கும்.

சந்தை அபாயமில்லை:

மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. சந்தை ஏற்ற இறக்கங்களால் முதலீட்டின் மதிப்பு குறையலாம். சிட் ஃபண்டுகளில் இந்த அபாயம் இல்லை.

டிஜிட்டல் சிட் ஃபண்டுகள்

சில ஆண்டுகளுக்கு முன் வரை, சிட் ஃபண்ட் என்பது முழுக்க முழுக்க கைமுறை (manual) முறையில்தான் நடந்தது. ஒரு குழுவை அமைப்பதில் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் பணத்தை நேரடியாகக் கொடுப்பது, ஏலத்தை நிர்வகிப்பது, யார் பணம் கட்டினார்கள், யார் ஏலம் எடுத்தார்கள் என அனைத்து வேலைகளும் கைமுறை கணக்கு வைத்தே நடந்தது. நிறைய டாகுமெண்டஷன் வேலைகள், நேரடி சந்திப்புகள் மற்றும் பதிவேடுகளை பராமரிப்பது ஆகிய கடினமான வேலைகளும் இதில் அடங்கும். இதற்கெல்லாம் அதிக நேரமானது.  இது பெரும்பாலும் பின்வருவனவற்றிற்கு வழிவகுத்தது:

நேரமின்மை:

கூட்டங்களை ஒழுங்கமைத்தல், பணம் வசூலித்தல் மற்றும் பதிவுகளை பராமரித்தல் ஆகியவற்றிருக்கு கணிசமான நேரமெடுத்தது.

வெளிப்படைத்தன்மை இல்லாமை:

கைமுறை செயல்முறைகள் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதையும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் கடினமாக்கியது, சில நேரங்களில் உறுப்பினர்களிடையே நம்பிக்கையின்மைக்கு வழிவகுத்தது.

செயல்பாட்டு சிக்கல்கள்:

பணப்பரிவர்த்தனைகளை நிர்வகித்தல், ஏலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது சவாலானதாகவும், தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இருந்தது.

வரம்புக்குட்பட்ட அணுகல்:

சிட் ஃபண்ட் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருந்து செயல்பட்டால், அந்த ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அதில் சேர முடியும். தூரத்து ஊர்களில் வசிப்பவர்கள் சிட் ஃபண்டில் சேர முடியாது.

ஆனா, இதுல நிறைய விஷயங்கள் இன்னும் கொஞ்சம் சுலபமா, வேகமா இருந்தா நல்லா இருக்கும்னு தோணும். அங்கதான் டிஜிட்டல் மயமாக்கல் கை கொடுக்குது.  எப்படி? நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமா இப்ப எல்லாமே ஆன்லைன்ல பண்ண முடியும். மொபைல் ஆப் மூலமா சிட் ஃபண்ட்ஸ்ல சேரலாம், பணம் கட்டலாம், ஏலம் எடுக்கலாம், எவ்வளவு சீட்டு சேர்ந்து இருக்கீங்க, அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கட்டி இருக்கீங்க, இன்னும் எவ்வளவு தவணைத்தொகை செலுத்த வேண்டும் என்பது போன்றவற்றை ஆன்லைன் மூலமாகவே பண்ண முடியும். 

டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்கிறது.

டிஜிட்டல் சிட் ஃபண்டுகளின் முக்கிய அம்சங்கள்

ஆன்லைன் தளம்:

பங்கேற்பாளர்கள் பிரத்யேக மொபைல் ஆப் அல்லது வலைத்தளங்கள் மூலம் சிட் ஃபண்டுகளில் சேரலாம், தவணைத்தொகையைச் செலுத்தலாம் மற்றும் ஏலங்களில் பங்கேற்கலாம்.

தானியங்கி செயல்முறைகள்:

நோட்டிபிகேஷன், பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் ஏல நிர்வாகம் போன்ற பணிகள் தானியக்கமாகுகின்றன, நேரத்தைச் சேமிக்கின்றன மற்றும் பிழைகளைக் குறைக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை:

ஏல முடிவுகள் போன்றவை பற்றிய விவரங்கள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுமட்டுமல்லாமல் உறுப்பினர்களிடையே நம்பிக்கையை வளர்க்கிறது.

சூப்பரான தொடர்பு:

டிஜிட்டல் தளங்கள், அறிவிப்புகள் (notifications) மாதிரியான வசதிகள் கொண்டு அனைவரும் எளிதாக தொடர்பில் இருக்க உதவுகின்றன.

பரந்த அணுகல்:

வெவ்வேறு இடங்களில் இருந்து தனிநபர்கள் பங்கேற்க அனுமதிக்கிறது.

மேம்பட்ட பாதுகாப்பு:

டிஜிட்டல் தளங்களில் குறியாக்கம் (encryption), OTP போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால், பயனர் தகவலும், பணப்பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக இருக்கும்.

டிஜிட்டல் சிட் ஃபண்ட்: நன்மைகள்

சரி, இதனால சிறு தொழில் பண்றவங்களுக்கு என்ன லாபம்னு கேக்குறீங்களா? சொல்றேன் கேளுங்க!

நேரம் மிச்சம்:

முன்னாடி எல்லாம் சிட் ஃபண்ட் மீட்டிங்குக்காக கடை அடைச்சிட்டு போகணும். இப்ப ஆன்லைன்ல இருந்தே எல்லாத்தையும் முடிச்சிடலாம். டைம் ரொம்ப மிச்சமாகும். அந்த நேரத்துல உங்க பிசினஸ்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

ஈஸி அக்கவுண்டிங்:

கணக்கு வழக்கு பாக்குறது ரொம்ப பெரிய தலைவலி. டிஜிட்டல் சிட் ஃபண்ட்ஸ்ல ஆட்டோமேட்டிக்கா எல்லாமே ரெக்கார்ட் ஆயிடும். நீங்க தனியா உட்கார்ந்து கணக்கு போட வேண்டிய அவசியம் இல்ல. வரி கட்டும்போதும் கூட இது பயனுள்ளதாக இருக்கும்.

ட்ரான்ஸ்பரன்சி:

உங்களுடைய சீட்டு திட்டங்கள் பத்தின எல்லா விஷயங்களையும் எப்போது வேண்டுமானாலும் எங்கேயிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.

சுலபமான கம்யூனிகேஷன்:

கம்யூனிகேட் பண்றது ரொம்ப ஈஸி. மெசேஜ், நோட்டிபிகேஷன் மூலமா உடனுக்குடன் அப்டேட்ஸ் தெரிஞ்சுக்கலாம்.

இப்படி நிறைய பெனிஃபிட்ஸ் இருக்கு டிஜிட்டல் சிட் ஃபண்ட்ஸ்ல. சின்ன தொழில் பண்றவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்ன்னே சொல்லலாம். உங்க நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தி, உங்க பிசினஸ்ல இன்னும் நல்லா கவனம் செலுத்த இது ரொம்ப உதவும்.

சீட்டு போடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  1. எல்லா சிட் ஃபண்ட்ஸும் பாதுகாப்பானதுன்னு சொல்ல முடியாது. சில நிறுவனங்கள் மோசடி பண்ணலாம். பதிவுசெய்யப்பட்ட மற்றும் அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றும் ஒரு சிட் ஃபண்டை எப்போதும் தேர்வு செய்யவும்.
  2. ஏல முறையின் விதிமுறைகளை முழுமையாக புரிந்துகொள்ளவும்.
  3. சிட் ஃபண்ட்ஸ்ல குறிப்பிட்ட காலத்துக்கு பணம் போடணும். அதனால, உங்க பிஸினஸ் தேவைக்கு ஏத்த மாதிரி பட்ஜெட்டை திட்டமிட்டு அதற்கு ஏத்தமாதிரியான சீட்டு திட்டத்துல சேரனும்.
  4. சிட் ஃபண்ட்ஸ்ல பணம் எடுக்குறதுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். அதனால, சீட்டு போடறதுக்கு முன்னாடி எல்லா நிபந்தனைகளையும் நல்லா தெரிஞ்சுக்கணும்.
  5. கண்டிப்பாக உங்கள் மாதாந்திர தவணையை ஒழுங்காக செலுத்த வேண்டும். அப்போதுதான் சீட்டு திட்டத்தின் பயனை முழுமையாக அடையமுடியும்.
  6. சிட் ஃபண்ட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக புரிந்துகொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நினைவில் கொள்ள வேண்டியவை

சிறு தொழிலில் வளர்ச்சி பெற நிதி மிகவும் தேவையானது. அதற்காக அதிக வட்டியில் கடன் வாங்காமல், சிட் ஃபண்டில் முதலீடு செய்வதால் நமக்கு தேவையான நேரத்தில் பணம்  கிடைப்பதுடன் பெருத்த லாபமும் சம்பாதிக்கலாம். சிறு முதலீட்டில் தொழில் வளர்ச்சி பெற நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. சரியான திட்டமிடல் மற்றும் நம்பகமான குழுவை தேர்வு செய்தால், சிட் ஃபண்ட் உங்கள் தொழிலை மேலும் உயர்த்த உதவும்!

நீங்களும் சிட் ஃபண்ட் மூலம் உங்கள் தொழிலை வளர்த்துக் கொள்ள தயாரா?

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited